ஆக.15ஆம் தேதி, சென்னை கோட்டை கொத்தளத்தில், சுதந்திர தின விழாவை காண நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள்

0 2850
ஆக.15ஆம் தேதி, சென்னை கோட்டை கொத்தளத்தில், சுதந்திர தின விழாவை காண நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள்

 

சென்னைத் தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழாவுக்குப் பொதுமக்கள், மாணவர்கள் நேரில் வருவதைத் தவிர்க்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தலைமைச் செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் ஆகஸ்டு 15ஆம் நாள் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றுகிறார். இந்த ஆண்டு கொரோனா சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

மாவட்டந்தோறும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments