திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி ; நடிகர் ஆர்யாவிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு

0 3604
திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.71லட்சம் பண மோசடி புகார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி 71லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஜெர்மனி வாழ் ஈழத்தழிழ்ப் பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யாவிடம் மீண்டும் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை ஆஜரான நடிகர் ஆர்யாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதோடு, எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்டது. இந்த நிலையில், வழக்கிற்கு தேவையான கூடுதல் ஆதாரங்களை திரட்டும் பொருட்டு, நடிகர் ஆர்யாவிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், விசாரணையின் விபரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனக் கூறும் போலீசார், தற்போது மும்பை சென்றுள்ள ஆர்யா, 17-ந் தேதிக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராவார் எனத் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments