போன் செய்தால் வாகனம் மூலம் டீசல் டெலிவரி செய்யப்படும் - பாரத் பெட்ரோலியம் நிறுவனம்

0 3361
5 கி.மீ சுற்றளவில் உள்ளவர்களுக்கு டீசல் டெலிவரி

சென்னை அம்பத்தூரில் முதல் முறையாக போன் செய்தால் வாகனம் மூலம் டீசல் விநியோகம் செய்யும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடங்கி உள்ளது. மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்களில் டீசல் தீர்ந்து விடுவதால் பணிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அதனை கருத்தில் கொண்டு கள்ளிகுப்பத்தில் இயங்கும் திருவருள் பெட்ரோல் பங்கில், 5 கிலோமீட்டர் சுற்றளவில் டீசல் தேவைப்படுபவர்கள் அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டால் இருப்பிடங்களுக்கே சென்று குறைந்தபட்சம் 20 லிட்டர் முதல் 6000 லிட்டர் வரை டீசல் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 25 பங்குகளில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments