ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3052

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினத்தை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வரும் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments