எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, உப்புமா, பொங்கல்..!

0 4826

கோவை சுகுணாபுரத்தில், எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்டுள்ள ஆதரவாளர்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, உப்புமா, பொங்கல் வழங்கப்பட்டது.

சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெறுவதை அறிந்து, அவரது ஆதரவாளர்கள் அங்கு காலை முதலே திரளத் தொடங்கினர். குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு, வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டனர். காலை நேரத்திலேயே அங்கு வந்த அவர்களுக்கு சிற்றுண்டியாக இட்லி, உப்புமா, பொங்கல் விநியோகிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன.

அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டைக் கண்டித்து, எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments