உத்தரகாண்ட்- வெள்ளத்தில் சிக்கிய போலீஸ் வேன்

0 1739

உத்தரகாண்ட் மாநிலத்தில் கைதிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய போலீஸ் வேன் பத்திரமாக மீட்கப்பட்டது.

பவுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இந்நிலையில் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க சில கைதிகளை ஏற்றிக் கொண்டு காவல்துறை வாகனம் ஒன்று ஆற்றைக் கடக்க முயன்றது.

ஆனால் நீரின் வேகத்தில் காவல்துறை வாகனம் நடு ஆற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு காவல்துறை வாகனம் பத்திரமாக மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments