கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வருகை ; நீர்வரத்து வினாடிக்கு 14ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

0 2691
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வருகை

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கலுக்கு வரத் தொடங்கியதால் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளன.

இதனை அடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியும் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments