தமிழ்க் கல்வெட்டுக்களை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்? - நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி

0 3369
தமிழ்க் கல்வெட்டுக்களை ஏன் மைசூரில் வைத்திருக்க வேண்டும்?

தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழிக் கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வினவியுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒரு லட்சம் கல்வெட்டுக்களில் 60 ஆயிரம், தமிழ்க் கல்வெட்டுக்கள் எனும்போது, அவற்றை மைசூரில் ஏன் வைக்க வேண்டும்? என்று நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி எழுப்பியது.

1980ஆம் ஆண்டிலேயே தமிழ்க் கல்வெட்டியலுக்கான கிளை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழுக்கான 4 கல்வெட்டியலாளர்களில் இருவர் சென்னையிலும், இருவர் மைசூரிலும் உள்ளதாகவும், சென்னையில் சமஸ்கிருதக் கல்வெட்டியலாளர் ஒருவர் உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக் கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன? என்றும், தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழிக் கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்? என்றும் நீதிபதிகள் வினவினர்.

அது அரசின் கொள்கை முடிவு என மத்திய அரசு தெரிவித்ததால், ஒன்றன் அடையாளத்தை மறைக்கும் வகையில் அரசின் கொள்கை முடிவு இருக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments