பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு ; முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

0 2583
முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட முன்னாள் எஸ்.பி இருவரும், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர்மன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ப்படுத்த, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கேட்டபோது, குற்றச்சாட்டுகளை மறுத்த அவர்கள் தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். வழக்கை சந்தித்துக் கொள்வதாகவும், ஜாமீன் வழங்குமாறும் கேட்டனர். விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments