நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல்

0 3352

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் தொடங்கி, இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய மர்ம நபர்களை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

தன் பெயரிலான போலி மின்னஞ்சல்கள் மூலம் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்புவதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சார்பில் அபிராமபுரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல், ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments