கடின உழைப்பாலேயே ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடிந்தது - நீரஜ் சோப்ரா

0 5001
கடின உழைப்பாலேயே ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடிந்தது

கடின உழைப்பாலேயே ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதாக ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஒலிம்பிக்கில் சிறப்பான முறையில் திறனை வெளிப்படுத்த விரும்பியதாகவும், தங்கப் பதக்கம் உறுதியாகும் வரை தான் ஓய்ந்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக விளையாட்டரங்கத்துக்குச் சென்றபோது விளையாட்டை எதிர்காலத் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், நாட்டுக்காக விளையாடுவோம் பதக்கம் வெல்வோம் என நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்திலோ, ஊரிலோ எவரும் விளையாட்டுத் துறையில் இல்லை என்றும், கடின உழைப்பாலும், அனைவரின் ஆதரவாலுமே வெற்றிபெற முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments