பூரி ஜகன்னாதர் ஆலயத்தை திறக்க ஏற்பாடு

0 2829

பூரி ஜகன்னாதர் ஆலயம் மீண்டும் பக்தர்களுக்காக வரும் 16 ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட கோவில் தலைமை நிர்வாகி கிருஷண் குமார் கோவிட் பரிசோதனை சான்று அல்லது இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட சான்றிதழ் உள்ள பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முதல் 5 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய முன்னிலை அளிக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் முடிவாகியுள்ளது.இதர பக்தர்களுக்கு ஆகஸ்ட் 23 முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments