பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு ஆக.16 வரை நீட்டிப்பு

0 3865

பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் 144 தடையுத்தரவு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

141 நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிய பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவு 10 முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 769 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்குள் நுழைய கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments