ஆக்சன் அவதாரம் கமாண்டோ நடிகையின் மூக்கு உடைந்த சோகம்..! இன்ஸ்டண்டா இன்ஸ்டாவில் அப்பாலஜி..!

0 5214

தாய் தந்தையின் பேச்சை மீறி ஆக்சன் படத்தில் லேடி கமாண்டோவாக நடித்து வந்த பாலிவுட் நடிகை சாரா அலிகானுக்கு படப்பிடிப்பின் போது மூக்கு உடைந்தது. இதையடுத்து அவர் மூக்கில் ஏற்பட்ட காயத்துடன் தாய் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கேதார் நாத் என்ற இந்திப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாரா அலிகான். மூன்று திருமணங்களை செய்த பிரபல இந்தி நடிகர் சயிப் அலிகானுக்கும் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவரான சாரா அலிகான் தன்னை இந்தி திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ள புது புது முயற்சிகளை செய்து வருகின்றார்.

அந்தவகையில் பட்டாலியன் பெண் கமாண்டோ ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்தில் கமாண்டோ வேடத்தில் ஆக் ஷன் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இருவருடனும் பேசிக் கொள்ளும் சாரா அலிகான் தனது ஆக்சன் அவதாரம் குறித்து பெற்றோரிடம் கூறி அனுமதி கேட்டுள்ளார்.

ஆக்சன் காட்சிகள் என்றால் ஆபத்து இருக்கும் என்று சுட்டிக்காட்டி நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், அதனை மீறி சாரா அலிகான் இந்தப்படத்தில் கமாண்டோவாக நடித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

பெற்றோர் அச்சப்பட்டது போலவே அசாமில் நடந்த படப்பிடிப்பின்போது சாரா அலிகானுக்கு முக்குடைந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைக்கு பின்னர் மூக்கில் பிளாஸ்திரியுடன் இருக்கும் புகைப்படத்தையும், தனது மூக்கில் ஏற்பட்டுள்ள வெட்டுக் காயத்தையும் புகைபடம் மற்றும் வீடியோவாக இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ள நடிகை சாரா அலிகான், தனது தாய் தந்தையரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

சாரா அலிகான் தனது முதல் படமான கேதார்நாத்தில் வேறு மதத்தை சேர்ந்த இளைஞனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்து திருமனம் செய்வது போல நடித்திருந்ததால் அவருக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதனால் சாரா அலிகானின் மூக்கில் ஏற்பட்ட காயம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

 
 
 
View this post on Instagram

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments