உத்தரப்பிரதேசத்தில் கார் ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய பெண் மீது பாய்ந்தது வழக்கு

0 5332
உத்தரப்பிரதேசத்தில் கார் ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய பெண் மீது பாய்ந்தது வழக்கு

த்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தம் மீது மோதிய டாக்சியின் ஓட்டுனரை காரில் இருந்து இழுத்து கன்னத்தில் பளார் அறைவிட்ட பெண்ணின் வீடியோ வைரலாகப் பரவியதை அடுத்து அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்த வீடியோ காட்சியில் அந்தப் பெண் டாக்சி ஓட்டுனரை காரில் இருந்து சட்டையைப் பிடித்து வெளியே இழுத்து செல்போனை பறித்து உடைத்ததுடன் அவரை அடித்து உதைத்து சரமாரியாக தாக்குவதும் கிள்ளுவதுமாக இருந்தார் .

இதனைக் கண்டு கொதித்துப் போன டாக்சி ஓட்டுனர்களும் சமூக ஆர்வலர்களும் அந்தப் பெண்ணை கைது செய்யுமாறு காவல்துறையை வலியுறுத்தி சமூக ஊடகத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கினர். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments