"போலீஸ்" ஸ்டிக்கருடன் சைரன் வைத்த பொலீரோ ஜீப்பில் வந்த போலி போலீஸ்

0 5926

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே போலீஸ் ஸ்டிக்கருடன், சைரன் வைத்த பொலீரோ ஜீப்பில் வந்த போலி போலீஸ் கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.

லட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய, சைரன் வைத்த பொலீரோ ஜீப் ஒன்று வந்துள்ளது.

வாகனத்தின் பதிவு எண் பலகையிலும் அரசு வாகனம் என்பதைக் குறிக்கும் G என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் வாகனத்தின் தோற்றத்திலும் பதிவு எண்ணிலும் சந்தேகம் கொண்ட போலீசார், ஜீப்பை நிறுத்தி, விசாரித்துள்ளனர். உள்ளே அமர்ந்திருந்த நபர், தான் சென்னை போலீஸ் கமிஷனர் எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் காண்பித்த காவல்துறை அடையாள அட்டையில் துணை ஆணையர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீவிர விசாரணையில் அந்த நபர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் என்பதும் போலி போலீஸ் என்பதும் தெரியவந்ததை அடுத்து, அவரைக் கைது செய்து, வாகனத்தையும் ஒரு ஏர் கன் வகை துப்பாக்கியையும் மேலும் சில போலி அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அவருடைய பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments