குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்தில் தலைமைச் செயலகம்

0 4250

ட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு ஆகியவற்றில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நாளை வர உள்ள நிலையில், சென்னையில் தலைமை செயலகம் இன்றே முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு அதிவிரைவுப்படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 500க்கும் மேற்பட்ட காவலர்கள் 5 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மோப்பநாய் நாய் கொண்டு கோட்டை முழுவதும் சோதனையிடப்படுவதுடன், வாகனங்கள் மிகுந்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் தகுந்த அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக காவலர்கள் வாகன பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments