கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார இயக்கம்..! -முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

0 3694

மிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சரை வண்ணத்துபூச்சி வடிவமைப்புடன் கூடிய நடனக் கலைஞர்கள் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து முகக்கவசம் வடிவில் நின்ற செவிலியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர், முகக்கவசம் அணிவோம் கொரோனாவை வெல்வோம் என்ற பேட்ஜையும் வெளியிட்டார். கொரோனா விழிப்புணர்வுக் கருத்துக்களை முதலமைச்சர் முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கொரோனா விழிப்புணர்வுக் கண்காட்சியைத் தொடக்கி வைத்து, மூன்றாவது அலையைத் தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வுக் காணொலியையும் வெளியிட்டுக் கையெழுத்து இயக்கத்தையும் தொடக்கி வைத்தார்.

கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்கத் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்தித் துறை சார்பில் பிரச்சார வாகனங்களைக் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments