கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு..! -பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

0 4507

ங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியின் போது விரலில் ஏற்பட்ட காயம் குணமாவதற்கும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது முடிவை ஏற்றுக் கொள்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 2011ல் ஒருநாள் போட்டிகளிலும், 2013 ல் டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்துக்காக ஆடத் துவங்கி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.2019 உலக கோப்பையை இங்கிலாந்து வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தவர்.

ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளதால், இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாட மாட்டார். ஐபிஎல்லில், ராஜஸ்தான் ராயல்சுக்காக பென் ஸ்டோக்ஸ் ஆடி வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments