பெகாசஸ் மென்பொருள் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

0 3497

பெகாசஸ் உளவு மென்பொருளைத் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

14 நாடுகளின் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், செய்தியாளர்கள் உட்பட ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோரின் செல்பேசிகளில் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளைக் கொண்டு உளவுபார்க்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருளைத் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய  அதிகாரிகள்  ஆய்வில் ஈடுபட்டதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகள் தங்கள் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதாக என்எஸ்ஓ நிறுவனமும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments