"தகைசால் தமிழர் விருதுக்கு" மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு..!

0 2697

கைசால் தமிழர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், சுதந்திரதின விழாவின்போது தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, அண்மையில் 100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்குத் “தகைசால் தமிழர்" விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. 

இதனிடையே தமக்கு விருது அறிவித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள சங்கரய்யா, பரிசுத் தொகை 10 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments