குடிபோதையில் தாறுமாறாக சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து

0 4575

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்தும், அருணும் ஸ்கூட்டரில் பழனி சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தாறுமாறாக வந்த ஹூண்டாய் கார் ஒன்று, பைக்குக்கும், காருக்கும் நடுவில் நுழைய முயன்று ஸ்கூட்டரின் பக்கவாட்டில் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட ஸ்கூட்டர் குட்டிக் கரணம் அடிக்க, அருணும் அஜித்தும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்தக் கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்த போலீசார், காரை ஓட்டிய சதீஷ்குமாரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments