பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது -உச்சநீதிமன்றம்

0 3618

பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக டிராபிக் சிக்னல்களிலும், சந்தைகளிலும் இதர பொது இடங்களிலும் இருந்து பிச்சைக்காரர்களை அகற்ற வேண்டும் என்ற மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்தனர்.

பிச்சைக்காரர்கள் விவகாரத்தில், வசதிபடைத்தவர்களின் கண்ணோட்டத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என்றும் அது ஒரு சமூக-பொருளாதார பிரச்சனை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வறுமை தான் பிச்சை எடுக்க காரணம் என்று நீதிபதிகள் கூறினர். கொரோனா பரவலின் பின்னணியில், பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று தாக்கலான மற்றொரு மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் எம்ஆர்.ஷா அமர்வு, அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments