பணியின் போது செல்போன் பயன்படுத்துவதை ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டும் - போக்குவரத்துத் துறை வெளியீடு

0 4732

பணியின் போது ஒட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பணியில் இருக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பணியின் போது  ஒட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தங்கள் உரிமம் மற்றும் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், பயணத்தின் போது ஓட்டுநர்கள் தங்களது செல்போன்களை நடத்துநர்களிடம் வழங்க வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments