தமிழ்நாட்டில் மேலும் 1,808 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி : 22 பேர் பலி

0 3766

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 169ஆக சரிந்தது.

சென்னையைப் பொறுத்தவரை 126 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில், 2,447 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

வைரஸ் பெருந்தொற்றுக்கு மேலும் 22 பேர் பலியானதாகவும், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,364ஆக குறைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments