பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

0 2826

ரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் நூறடியை எட்டியதால் வினாடிக்கு 5,430 கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரக் காலமாகக் கனமழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 19ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.

அதன்பின் நீர்வரத்து குறைந்தபோதும் இன்று மாலை 4 மணிக்கு அணை நீர்மட்டம் 100 அடியைத் தொட்டது. 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்காவது ஆண்டாக அணை நிரம்பியுள்ளது.

105 அடி உயரமுள்ள இந்த அணையில் ஜூலை இறுதி வரை 100 அடியும், அதன்பின் அக்டோபர் வரை 102 அடியும் நீர் தேக்கலாம் என விதி உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments