இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கொழும்புவில் இன்றிரவு 7 மணிக்கு தொடக்கம்

0 4732

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 20ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது.

இலங்கை அணி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான  முதலாவது 20ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்றிரவு 7 மணி அளவில் நடைபெறுகிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை வென்ற உற்சாகத்தில் இந்திய அணியும், 20ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணியும் உள்ளதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments