தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு திட்டத்தை கொண்டுவர வேண்டாம் -இபிஎஸ்
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு புழக்கத்தை கொண்டு வந்து ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் லாட்டரி சீட்டை ஒழிக்க, 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொள்கை முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, அதிகாரப்பூர்வமாக லாட்டரி சீட்டு திட்டத்தை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருவதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, அரசின் வருவாயை பெருக்க வேறு பல நல்ல வழிகளை தேடிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments