கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழையால் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

0 8587
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழையால் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரத்து 776 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நொடிக்கு ஆறாயிரத்து 419 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு 26 ஆயிரத்து 100 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 30 ஆயிரத்து 800 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து நேற்று முதல் நொடிக்கு முப்பதாயிரம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியில் வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments