டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0 5677
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்த மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானுவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றதை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தொலைக்காட்சியில் கண்டுகளித்த அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் வெற்றியைக் கொண்டாடினர்.

இது கடின உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும், தனது வெற்றியால் இந்தியாவுக்கும் மணிப்பூருக்கும் மீராபாய் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று தந்த மீராபாயைப் பாராட்டிப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், மீராபாயின் மகத்தான சாதனையால் இந்தியா பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வெற்றி இந்தியர் ஒவ்வொருவருக்கும் உந்துதலாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒளிமயமான தொடக்கம் அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது திறமையால் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த மீராபாய் சானுவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments