தமிழகத்தில் அனைத்து நூலகங்களையும் இன்று முதல் மீண்டும் திறக்க உத்தரவு..!

0 3329

மிழகத்தில் அனைத்து நூலகங்களையும் இன்று முதல் மீண்டும் திறக்கப் பொதுநூலகத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் நூலகங்களையும் மீண்டும் திறக்கக் கோரி வாசகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு பொதுநூலகத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி இன்று முதல் மீண்டும் திறக்கப் பொதுநூலக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

நூலகத்துக்கு வரும் வாசகர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வெப்பமானி கொண்டு சோதித்த பின்பே அவர்களை நூலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments