நீலகிரியில் குடியிருப்பு பகுதியில் நடமாடும் புலி - வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

0 3194
நீலகிரியில் குடியிருப்பு பகுதியில் நடமாடும் புலி - வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவர் சோலை பகுதியில் மூன்று பசு மாடுகளை புலி ஒன்று அடித்து கொன்று இழுத்து சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேவன் எஸ்டேட் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களின் அருகே கடந்த இரண்டு நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாராயணன் மற்றும் சுப்பிரமணி என்பவரின் பசுமாடுகள் வனப்பகுதியில் மேய்ந்துக்கொண்டிருந்தபோது, புலி ஒன்று அடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.

இதனால் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ள அப்பகுதி மக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments