ஆபாச வீடியோ தயாரித்த வழக்கு : ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவல் வரும் 27ந் தேதி வரை நீட்டிப்பு

0 2080
ஆபாச வீடியோ தயாரித்த வழக்கு : ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவல் வரும் 27ந் தேதி வரை நீட்டிப்பு

பாச வீடியோ தயாரித்த வழக்கில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் போலீஸ் கஸ்டடி வரும் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை வைத்து ஆபாச வீடியோக்கள் தயாரித்து, அவற்றை கட்டண மொபைல் செயலிகளில் வெளியிட்ட விவகாரத்தில், ராஜ் குந்த்ரா கடந்த 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. இப்போது அது மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆபாச படங்கள் மூலம் சம்பாதித்ததில், மாதம் தோறும் சுமார் 10 லட்சம் ரூபாய்  வரை ஆன்லைன் பெட்டிங்கில் ராஜ் குந்த்ரா செலவழித்ததாகவும், அவரது லேப்டாப்பில் இருந்து 51 ஆபாச திரைப்படங்களும், 48 TB  அளவுக்கு டேட்டாக்களும் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments