ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட தம்பதி கோரிக்கை

0 2223
ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட தம்பதி கோரிக்கை

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான 600 கோடி ரூபாய் மோசடி புகாரை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றழைக்கப்படும் கணேஷ், சாமிநாதன் ஆகியோர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் இரட்டிப்பாக கிடைக்கும் என்கிற வாக்குறுதியின் அடிப்படையில் சுமார் 15 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்ததாகவும் அதனைத் திருப்பிக் கொடுக்காமல் அவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் துபாய் வாழ் தமிழக தம்பதிகளான பைரோஸ்பானு, ஜபருல்லா தம்பதி புகாரளித்திருந்தனர்.

அதன் பேரில் ஹெலிகாப்டர் சகோதரர்களை போலீசார் தேடி வரும் நிலையில், அவர்கள் சுமார் 600 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் எனவே வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments