தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2360
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு இரு நாட்களுக்கும், வங்கக் கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோன்று, அரபிக் கடல் பகுதிகளுக்கும் 5 நாட்களுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments