பெகசஸ் பிரச்சனை தனிநபர் தரவு மசோதா நிறைவேற்றப்படுவதை தடுக்கும் சதி - வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி

0 3232
பெகசஸ் பிரச்சனை தனிநபர் தரவு மசோதா நிறைவேற்றப்படுவதை தடுக்கும் சதி - வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி

மூக வலைதளங்களில் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா சட்டமாக மாறுவதை தடுப்பதற்கும் பெகசஸ் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் சிலர் எழுப்புவதற்கும் தொடர்பு இருப்பதாக வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை முடக்கும் திட்டத்துடன் பெகசஸ் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனிநபர் தரவுகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது சட்டமாக மாற உள்ள நிலையில், அது நடந்துவிடக்கூடாது என்பதற்காக பெகசஸ் போன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக மீனாட்சி கூறினார்.

இது இந்தியாவின் கவுரவத்தை கெடுக்க நடக்கும் சதி என்று குறிப்பிட்டுள்ள அவர், பெகசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல் உண்மையானது இல்லை என்றும்  ஒரு குறியீடு மட்டுமே என சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments