சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

0 3870
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்வதற்கான கால அவகாசம் 25-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான இறுதி மதிப்பெண் பட்டியல் 31-ஆம் தேதிக்குள்ளாக வெளியிடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கீடு செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிறைலியில் 25-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக CBSE தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அறிவித்துள்ளார். 25-ஆம் தேதிக்குள்ளாக மதிப்பெண்களை கணக்கிடாத பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments