பெகாஸஸ் விவகாரம் : 10 பிரதமர்கள், 3 அதிபர்கள் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு ?

0 3575
பெகாஸஸ் விவகாரம் : 10 பிரதமர்கள், 3 அதிபர்கள் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு ?

பெகாஸஸ் விவகாரம் இந்தியாவை உலுக்கிய நிலையில் உலக அளவிலும் இந்த உளவு செயலியின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட 10 நாடுகளின் பிரதமர்கள், 3 அதிபர்கள், ஒரு நாட்டின் மன்னர் உள்பட பலர் உளவு பார்க்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் அமைச்சர்கள் உள்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதால் பிரான்ஸ் அரசு தனி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதே போல் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா ஆகியோரும் பெகாஸஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் செல்போன்கள் எப்படி இலக்கானது என்ற விவரம் தெரியவில்லை.

பொது வெளியிலும், செய்தியாளர்கள் மூலமும், அரசு செய்திக் குறிப்புகளிலும் வெளியான இவர்களின் செல்போன் எண்கள் மூலமாக இவர்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments