மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம்... போலீசாரை அழைத்து வந்து காகத்தை மீட்ட சிறுவன்

0 2567

சென்னை போரூர் அருகே மாஞ்சா நூலில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய காகத்தை போலீசாரை அழைத்து வந்து மீட்ட சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

காரம்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சீவ் என்ற அந்த 11 வயது சிறுவன், காலை தனது வீட்டு மாடியில் யோகாசனம் செய்வதற்காகச் சென்றுள்ளார்.

அங்குள்ள மரத்தின் மீது காகம் ஒன்று காற்றாடி விடப் பயன்படும் மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த சஞ்சீவ், உடனடியாக கீழே இறங்கி ஓடி அருகிலுள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசாரை அழைத்து வந்துள்ளார்.

போலீசார் நீண்ட நேரம் போராடி காகத்தை மாஞ்சா நூலின் பிடியில் இருந்து மீட்டனர். சிறுவனின் இந்த செயல், பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments