மசூதியில் தொழுகை மேற்கொண்ட மாலி நாட்டு இடைக்கால அதிபரை கத்தியால் தாக்கி கொலை முயற்சி

0 2248

மசூதியில் தொழுகை மேற்கொண்ட மாலி நாட்டு இடைக்கால அதிபரை மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைநகர் பமாக்கோ-வில் (Bamako) உள்ள மசூதியில் அதிபர் அஸிமி கொய்ட்டா (Assimi Goita) வழிபாடு மேற்கொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அதிபரை தாக்கினார்.

அந்த நபரையும், அவருடன் இருந்த மற்றொரு நபரையும் சம்பவ இடத்திலேயே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அதிபரின் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments