சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு அடுத்தடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா

0 5848
சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு அடுத்தடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் உடல்நிலை குறித்துக் கேட்டறிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் ஒரே நேரத்தில் அங்கு வந்து சென்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் மதுசூதனன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்குச் சென்று மதுசூதனனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது சசிகலாவும் மருத்துவமனைக்கு வந்ததால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா மருத்துவமனைக்குள் நுழைந்தார்.

அப்போது, மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

இதனால் எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார்.

வடசென்னையில் எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கி அவருடனேயே செயல்பட்டு வந்த மதுசூதனன் அதிமுக குடும்பத்தின் மூத்த சகோதரர் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments