கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்திய பயணிகள் விமானத்திற்கு கனடா விதித்த தடை நீட்டிப்பு

0 1938
கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்திய பயணிகள் விமானத்திற்கு கனடா விதித்த தடை நீட்டிப்பு

கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து கனடா அறிவித்திருந்தது.

இந்தத் தடை நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், அடுத்த மாதம் 21 ம் தேதி வரை தடை நீடிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒமர் அல்காப்ரா, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பதாகவும், மருத்துவத்துறை நிபுணர்களின் பரிந்துரைப்படி விமானப் போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments