சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி ; செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

0 2275
சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சிவசங்கர் பாபா மீதான அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர் நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ், 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சிவசங்கர் பாபாவும், அவருக்கு உதவிய ஆசிரியை சுஷ்மிதாவும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சிபி சிஐடி காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments