வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்க நடவடிக்கை ; அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டம்

0 2532
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்க நடவடிக்கை

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோவில் சிலைகளை மீட்க, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கோவில்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பலப்படுத் தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 70 நாட்களில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்துமீட்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், கோவில் சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி வெளிப்படை தன்மையோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments