4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது
கடலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டான்.
சாலையில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 16வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
Comments