வீட்டுக்குள் நுழைய முயன்ற 8 அடி நீள ராஜநாகம்..! கணப்பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய தந்தை

0 5533

வியட்நாம் நாட்டில் வீட்டுக்குள் நுழைய முயன்ற ராஜநாகத்திடம் இருந்து குழந்தை பத்திரமாக காப்பாற்றப்பட்டது.

த்ராங் என்ற இடத்தில் வீட்டு முற்றத்தில் அமர்ந்து குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் குழந்தையில் தாத்தா எதையோ கண்டு திடீரென அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

உடனே சுதாரித்துக் கொண்ட குழந்தையின் தந்தை, குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போதே, சுமார் 8 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று வேகமாக வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தது.

அதற்கு முன்பாகவே கதவுகள் பூட்டப்பட்டதால் அங்குமிங்கும் அலைந்த ராஜநாகம் வீட்டை விட்டு வெளியேறியது. தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments