கொரோனா பரவலால் கன்வர் யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு தடை

0 2664

ன்வர் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டாலும் வேறு மாநில பக்தர்கள் வரக்கூடாது என்பதற்காக வரும் 24ம் தேதி முதல் உத்தரகாண்ட் மாநில எல்லைகள் மூடப்படுகின்றன.

கொரோனா தொற்று காரணமாக கன்வர் யாத்திரைக்கு உத்தரகாண்ட் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அம்மாநில டிஜிபி அசோக் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில், தடையை மீறி நுழைந்தவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கான இடங்களை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பேருந்துகளில் வரும் பக்தர்கள் வேறு வழிகளில் திருப்பி விடப்பட வேண்டும் என்றும், ரயிலில் வருபவர்கள் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments