பிதாமகன் பட பாணியில் சூதாட்டம் - பணத்தை இழந்து வீடு திரும்பும் விவசாயிகள்

0 3084
பிதாமகன் பட பாணியில் சூதாட்டம் - பணத்தை இழந்து வீடு திரும்பும் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெறும் ஆட்டுச்சந்தையில் பிதாமகன் திரைப்பட பாணியில் விவசாயிகளை சூதாட்டத்தில் ஈடுபடுத்தி ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா லங்கர் கட்டையை உருட்டி பணத்தை சுருட்டுவார்.இதே பாணியில் அய்யலூரில் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் ஆயிரம் ரூபாய் போட்டால் 1500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் போட்டால் 2500 ரூபாய் என ஆசை வார்த்தைகள் கூறி, ஆடுகளை வியாபாரம் செய்ய வருவோரை இழுக்கின்றனர். கட்டைகளை உருட்டி சில வித்தைகள் காட்டி விவசாயிகள் போடும் பணத்தை லாவகமாக சுருட்டிச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments