மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமி; வேடிக்கை பார்த்த கிராமத்தினரால் நேர்ந்த விபரீதம்..! 4 பேரின் உடல்கள் மீட்பு

0 5674

த்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் கிணறு இடிந்ததில் அதில் விழுந்த பலரை தேடும் பணி நடக்கிறது.

விடிஷா மாவட்டத்தில் உள்ள Ganj Basoda என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுமி தவறி விழுந்தார். கிணற்றில் 20 அடி உயரத்திற்கு நீர் இருந்துள்ளது.

அவரை காப்பாற்ற சிலர் கிணற்றுக்குள் இறங்கினர். தகவல் அறிந்து வந்து கூடிய கிராமத்தினர் கிணற்றின் தடுப்புச் சுவரை சுற்றி நெருக்கி அடித்து நின்றதால் பாரம் தாங்காமல் அது இடிந்து ஏராளமானோர் இடிபாடுகளுடன் கிணற்றில் விழுந்தனர்.

அப்போது மீட்பு பணியில் இருந்த டிராக்டர் 4 போலீசாருடன் கிணற்றுக்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments