தொடர் விக்கல் காரணமாக பிரேசில் அதிபர் போல்சனேரோ மருத்துவமனையில் அனுமதி

0 2710
தொடர் விக்கல் காரணமாக பிரேசில் அதிபர் போல்சனேரோ மருத்துவமனையில் அனுமதி

தொடர் விக்கல் காரணமாக உடல் நலன் பாதித்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெய்ர் போல்சனேரோ மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு, கல்லீரல் மற்றும் குடல் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அன்று முதல் அவருக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவருக்கு தொடர் விக்கல் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சா பவுலா நகரில் உள்ள மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு குடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பரிசோதனை முடிவுகளை கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments